
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்
An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

Categories
நீதிபதிகளுக்கும் ராமதாசுக்கும் – இரு கடிதங்கள்.
நீதி- அநீதி: இரு கடிதங்கள் கடிதம் 1: அன்புள்ள உச்ச நீதி மன்ற நீதிபதிகளுக்கு வணக்கம். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நாட்டின் வளர்ச்சிக்கு அது தேவை. எனவே அதை மூடச் சொல்ல முடியாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்று தீர்ப்பளித்திருக்கிறீர்கள். இது எதுவும் எங்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே …
இன்னும்...
கேணி: மே 12: தமிழ் சினிமாவின் கதை
கேணி சந்திப்பு: மே 12 ஞாயிறு மாலை 4 மணி: இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம்: தமிழ் சினிமாவின் கதை: பேசுபவர் நடிகர்/திரைப்பட வரலாற்றாளர் மோகன் ராமன். இடம்: கேணி வளாகம், 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அனைவரும் வருக. அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி. ஒரு குறிப்பு: …
இன்னும்...
பதில்கள்- சூரியகதிர் 1.5.2013
வேணுவினோதினி, சென்னை. தலைநகர் டெல்லியில் மட்டும் அடிக்கடி கற்பழிப்புகள் நிகழ என்ன காரணம்? சட்டம் ஒழுங்கு சரியில்லையா? அல்லது ஷீலாதீக்ஷித் மோசமான ஆட்சி நடத்துகிறாரா? எல்லா ஊர்களிலும்தான் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. டெல்லி தலைநகர் என்பதாலும், மீடியா அரசியல் முனைப்புடன் அங்கே இருப்பதாலும், சர்வதேச ஊடகங்களும் இந்தியாவின் தலைநகரில் அக்கறை காட்டுவதாலும் அங்கே நடப்பவை …
இன்னும்...
பாதகம் செய்பவரைக் கண்டால்…
அண்மையில் ‘கார்டியன்’ ஆங்கில இதழில் வந்த ஒரு கட்டுரையை பேஸ்புக் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தினசரி செய்திகளைப் படிக்காமல், பார்க்காமல் கேட்காமல் இருந்தால் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று வாதாடுகிற கட்டுரை அது. ஏனென்றால் பெரும்பாலான செய்திகள் எந்த விதத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவக் கூடியவையே அல்ல. மேலும் குழப்பக்கூடியவையே என்பதே …
இன்னும்...
திருப்பிக் கட்டமுடியுமா?
உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன்.பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலி கோவில், ஸ்ரீரங்கம் …
இன்னும்...
நான் யார்
பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …
இன்னும்...
சின்னத் திரை
சின்னத் திரை என் சின்னத் திரை முயற்சியின் தொடக்கம்: என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது …
இன்னும்...
அணு உலை வேண்டாம் என்பதை அரசு மதிக்காததைக் கண்டித்து வாக்காளர் அட்டையை திருப்பித்தரும் போராட்டம்
- இதையும் அரசு அலட்சியப்படுத்தினாலும், உலக கவனத்தை ஈர்க்க நிச்சயம் செய்யவேண்டும் (100%, 1 Votes)
- இதையும் அரசு அலட்சியப்படுத்தும் என்பதால் செய்வச்தில் பயனில்லை. (0%, 0 Votes)
Total Voters: 1

